எந்த சர்ச்சையும் இல்லாமல் கேப்டன் பொறுப்பு எனக்கு வந்துள்ளது – மோர்கன் பதில்!

Webdunia
சனி, 17 அக்டோபர் 2020 (16:26 IST)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் பதவி தினேஷ் கார்த்திக்கிடம் இருந்து மோர்கனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

2020ம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. முதல் சுற்றில் 7 போட்டிகளில் மற்ற அணிகளோடு மோதிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 போட்டிகளில் வெற்றியும், மூன்று போட்டிகளில் தோல்வியும் தழுவி ஐபிஎல் தரவரிசையில் நான்காவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் கடந்த முதல் சுற்றில் 7 போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்து வந்த தினேஷ் கார்த்திக் கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் நைட் ரைடர்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான இயான் மோர்கன் புதிய கேப்டனாக பதவி ஏற்றுள்ளார். இரண்டாம் சுற்று ஆட்டங்களுக்கு இவரே கேப்டனாக நீடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்த பின்னர் பேசிய மோர்கன் ‘எந்த சர்ச்சையும் இல்லாமல்தான் எனக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளதாக அறிகிறேன். தினேஷ் கார்த்திக் கேப்டன் பதவியை துறக்க அவருக்கு அசாத்திய துணிச்சல் இருந்திருக்க வேண்டும். எங்கள் அணியின் பல கேப்டன்சி திறமையுள்ள வீரர்கள் உள்ளனர். அவர்கள் அணியின் வளர்ச்சிக்கு தேவை’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட்டை தவிர வேறு எதுவும் வேண்டாம்.. திருமண ரத்துக்கு பிறகு மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா..

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments