டாஸ் வென்று பேட்டிங் எடுத்த ரோஹித் சர்மா! சென்னைக்கு சேஸிங் சாதகமா?

Webdunia
ஞாயிறு, 12 மே 2019 (19:09 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் கிளைமாக்ஸ் போட்டியான இன்று இறுதிப்போட்டி இன்னும் சில நிமிடங்களில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் சற்றுமுன் போடப்பட்ட டாஸில் மும்பை கேப்டன் ரோஹித்சர்மா டாஸ் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளார். 
இந்த தொடரில் பலமுறை டாஸ் வென்ற தோனி, இம்முறை டாஸ் தோல்வி அடைந்தது அதிருப்தி அடைந்தாலும், இன்று டாஸ் வென்றாலும் பந்துவீச முடிவு செய்வேன் என்று தோனி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்றைய நிலையில் சிஎஸ்கே அணிக்கு சேஸிங் தான் சாதகம் என்றும் கூறப்படுகிறது
 
இன்றைய சென்னை அணியில் எந்தவித மாற்றமும் இல்லை என்று தோனி கூறியுள்ளார். அந்த அணியில் வாட்சன், டூபிளஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, தோனி, பிராவோ, ஜடேஜா, தீபக் சஹார், ஹர்பஜன்சிங், இம்ரான் தாஹிர், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் உள்ளனர்.
 
அதேபோல் இன்றைய மும்பை அணியில் டீகாக், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யதவ், இஷான் கிஷான், ஹர்திக் பாண்ட்யா, க்ருணால் பாண்ட்யா, பொல்லார்ட், மெக்லன்கென், ராகுல் சஹார், மலிங்கா, பும்ரா ஆகியோர் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிங்கு சிங்கிற்கு உபியில் அரசு பணி.. நியமன உத்தரவை வழங்கினார் முதல்வர் யோகி..!

மறைந்த பின்னர் ஷேர் வார்னே குடும்பத்திற்கு கிடைக்கும் ரூ.450 கோடி.. ராயல் ராஜஸ்தான் அணி ஏன் கொடுக்கிறது?

ஐபிஎல் தொடங்க இன்னும் 2 நாட்கள் தான் இருக்கிறது.. திடீரென மிகப்பெரிய விலைக்கு விற்கப்பட்ட ராஜஸ்தான் அணி..!

3 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட முக்கிய வீரர் விலகல்.. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி திட்டம் என்ன?

27 வயதான மாடல் அழகியுடன் 15 வயது ரொனால்டோ மகன் டேட்டிங்? புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments