ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து தெற்கு காஷ்மீர் இமயமலை பகுதியில் அமைந்துள்ள புனித அமர்நாத் கோவிலுக்கு பயணம் மேற்கொள்ளும் 5வது பயணிகள் குழு இன்று காலை 5 மணியளவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் புறப்பட்டு சென்றது.
மொத்தம் 2693 பேர் கொண்ட இந்த குழுவில் 1793 பேர் ஆண்கள். 490 பேர் பெண்கள். மேலும், 150 குழந்தைகளும், 260 சாதுக்களும் அவர்களுடன் சென்றனர்.