முதலில் அரிசி, பருப்பு, பொட்டுக்கடலை, மிளகாய் எல்லாவற்றையும் சேர்த்து மிக்சியிலோ அல்லது மாவு அரைக்கும் கடையிலோ கொடுத்து அரைத்துக் கொள்ளவும். பின் ஒரு அகலக் கிண்ணத்தில் மாவை நன்றாக சலித்துக் கொள்ளவும்.
மாவுக்கு தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து 1 கரண்டி சூடான எண்ணெய் விடவும். எண்ணெய்க்கு பதிலாக வெண்ணெயும் விடலாம். முறுக்கு மிருதுவாக இருக்கும். மாவினை 2 பாகமாக பிரித்துக் கொள்ளவும். முதல் பாகத்தில் தண்ணீர் சேர்த்துப் பிசைந்துக் கொள்ளவும். ( ஒவ்வொரு பாகத்தையும் பொரிப்பதற்கு முன் தண்ணீர் சேர்த்து பிசையவும். )
முறுக்கு நாழியில், ஒரு கண் இருக்கும் தேன் குழல் அச்சைப் போட்டு சூடான எண்ணெயில் பெரிய முறுக்குகளாகப் பிழியவும். நன்றாக மொறுமொறுவென்று பொரிந்ததும் எண்ணெயில் இருந்து எடுத்து வடியவிட்டு ஆறிய பிறகு பறிமாறலாம்.