Webdunia - Bharat's app for daily news and videos

Install App

40 கிராம் தங்க நகையை தவிடு போல் முழுங்கிய மாடு

Arun Prasath
வியாழன், 31 அக்டோபர் 2019 (13:04 IST)
ஹரியானாவில் 40 கிராம் தங்க நகையை ஒரு காளை மாடு தீவனம் போல் முழுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம், சிர்சாவில் கலானாவாலி என்ற பகுதியில் வசித்து வருபவர் ஜனகராஜ். ஒரு நாள் இவரது மனைவியின் நகைகளை ஒரு பெரிய கிண்ணத்தில் வைக்கப்பட்டுள்ளது. அப்போது அவரது மனைவி காய்கறியை நறுக்கும்போது வந்த கழிவுகளை தவறுதலாக அந்த கிண்ணத்தில் சேமித்துள்ளார். பின்பு அந்த கழிவுகளை குப்பையில் கொட்டும்போது அந்த நகையையும் சேர்த்து கொட்டியுள்ளார்கள்.

அதன் பின்பு வீட்டில் நகை எங்கே என தேடியபோது தான் அவர்களுக்கு கழிவுகளோடு சேர்த்து நகையையும் கொட்டிய நியாபகம் வந்துள்ளது. பின்பு குப்பையில் தேடிய போது அந்த நகையை காணவில்லை. எனவே அந்த வீட்டிற்கு வெளியே உள்ள சிசிடிவி கேமராவை ஆராய்ந்தபோது, ஒரு காளை மாடு அந்த நகையை முழுங்கியுள்ளது தெரியவந்தது.

இதனையடுத்து அந்த மாடை தேடி கண்டுபிடித்து இழுத்து வந்து தற்போது பராமரித்து உணவு கொடுத்து வருகின்றனர். மேலும் சாணத்தில் எப்படியாவது அந்த நகை வந்துவிடும் என அந்த குடும்பத்தினர் காத்துக்கிடக்கின்றனராம். அந்த தங்க நகை 40 கிராம் எடையுள்ள தங்க நகை என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments