Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய தேசத்தின் விடுதலைப்போரில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஜவகர்லால் நேரு!!

Webdunia
திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (16:41 IST)
இந்திய சுதந்திர போராட்டத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஜவகர்லால் நேரு, சுதந்திர இந்தியாவின் முதல்  பிரதமராக இந்தியாவை வழிநடத்தியவர் ஆவார்.

 
நேரு அவர்கள் 1916-ல் கமலா கவுல் என்ற பிராமணப் பெண்ணை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு கமலா  நேருவும் சுதந்திர இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

 
அணி சேரா இயக்கத்தை உருவாக்கியவரில் ஒருவராகவும், சுதந்திரப்பாராட்ட வீரராகவும், இந்தியா முழுவதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலன், கல்வி முன்னேற்றம் குறித்துப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவரும், நவீன இந்தியாவின்  சிற்பி எனவும் அழைக்கப்பட்டவர் ஜவகர்லால் நேரு.

 
பாரத ரத்னா ஜவகர்லால் நேரு முதலாவது இந்திய பிரதமர் ஆவார். விடுதலை போராட்டத்தின் போதும், அதற்குப் பின்னரும்,  இந்திய தேசிய காங்கிரசில் இருந்தவர்களுள் மிதமான சோசலிசவாதிகளின் தலைவராகக் கருதப்பட்டவர்.

 
1947, ஆகஸ்ட் 15-ல் இந்தியா, பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெற்றபோது அதன் முதலாவது பிரதமராக பதவியேற்றார். 1964, மே 27-ல் காலமாகும் வரை அவரே இப்பதவியை வகித்து வந்தார்.



இவர் பிரபல காங்கிரசுத் தலைவராக இருந்த மோதிலால் நேருவின் மகனாவார். மாபெரும் செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர். தேசத்தின் விடுதலைப்போரில் தன்னை  அர்ப்பணித்துக் கொண்டவர் நேரு.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments