நுண் உரக்கிடங்கை இடமாற்றம் செய்ய கோரிக்கை

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (00:32 IST)
பெரியார் நகரில் நுண் உரக்கிடங்கை இடமாற்றம் செய்ய கோரி நகராட்சி தலைவர் மற்றும் துணை தலைவரிடம் கோரிக்கை.
 
கரூர் மாவட்டம் குளித்தலை பெரியார் நகர் ஜெய மஹால் அவென்யூவில் செயல்பட்டு வரும் நுண் உரக்கிடங்கை இடமாற்றம் செய்ய கோரி குளித்தலை சமூக ஆர்வலர்கள் மற்றும் பெரியார் நகர் பொது மக்கள் சார்பில் குளித்தலை நகர் மன்ற தலைவர் சகுந்தலா பல்லவிராஜா இல்லத்திற்கு சென்று தலைவராக பொறுப்பேற்றமைக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தனர் அதன் பின்னர் கோரிக்கை மனுவை அளித்தனர். அதேபோல் குளித்தலை நகர் மன்ற துணை தலைவர் கணேசனை இல்லத்திற்கு சென்று சந்தித்து துணை தலைவராக பொறுப்பேற்றமைக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தனர் அவரிடமும் மனு அளித்தனர்.  இந்நிகழ்வில் CPIM மாவட்ட செயற்குழு    உறுப்பினர் இரா. முத்துச்செல்வன், குளித்தலை நகர மதிமுக செயலாளர் சிவேஷ் வர்ஷன் மற்றும் பெரியார் நகர் பொதுமக்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாமா? என்ன ஆபத்து?

உடலில் உள்ள தேவையற்ற முடியை நீக்க எளிய இயற்கை வழி!

சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாகும் நாவல் பழங்கள்!

முள்ளங்கி கீரையை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் பலன்கள்..!

பூசணிப்பழம் உணவில் சேர்ப்பதால் என்னென்ன நன்மைகள்?

அடுத்த கட்டுரையில்
Show comments