இத்திருத்தலத்தில் இறைவன் சிவலிங்க மேனியாயும், தேவி தெற்கு முகமாக நின்றும் காட்சியளிக்கின்றனர். இக்கோயிலுள்ள நவ கன்னிகையர் சந்நிதியும் சிறப்புப் பெற்றதாகும்.
ஒரு சமயம் கங்கை, யமுனை முதலான நவ கன்னியர்கள் தங்களிடம் வந்து மூழ்குபவர் பாவம் தாங்கக் கூடவில்லை எனவும், அவற்றை போக்கியருட வேண்டுமென்றும் இறைவனிடம் வேண்டியதாகவும், சிவபெருமான் அருள்கொண்டு அக்கனியரை அழைத்து மகாமகக் குளத்தில் மூழ்கித் தங்கள் பாவங்களைப் போக்கிக்கொள்ள வழி செய்தார் என்று்ம திருத்தலப் புராணம் கூறுகிறது. அந்த நவகன்னியர் சந்நிதியும் தென்முகமாக உள்ளது.
நவ கன்னியரை வணங்கி பல பெண்கள் தங்கள் மீதான பாவங்களை போக்கிக் கொள்வர் என்றும் கூறப்படுகிறது.