ஆஸ்கர் விருது இயக்குனருக்கு ரூ.1 கோடி பரிசு.. முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்..!

Webdunia
செவ்வாய், 21 மார்ச் 2023 (11:20 IST)
ஆஸ்கர் விருது வென்ற தமிழ் திரைப்பட இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸ்க்கு ரூபாய் ஒரு கோடி பரிசு தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வழங்கினார். சமீபத்தில் ஆஸ்கார் விருது அறிவிக்கப்பட்ட நிலையில் இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ஆர்ஆர்ஆர் என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு என்ற பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. 
 
இதனை அடுத்து இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸ்  இயக்கத்தில் உருவான ‘தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. இதனை அடுத்து இந்த படத்தின் இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸ்க்கு பாராட்டுக்கள் குவிந்து வந்தது. 
 
இந்த நிலையில் ஆஸ்கார் விருதை பெற்றுவிட்டு நேற்று கார்த்திகி கோன்சால்வ்ஸ் இந்தியா திரும்பின நிலையில் அவரை அழைத்து பாராட்டு பத்திரம் மற்றும் ஒரு கோடி ரூபாய் பரிசு தொகையை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வழங்கினார்.
 
சென்னை தலைமை செயலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸ்க்கு ‘தமிழ் திரைப்படம் ஒன்றுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது தனக்கு மிகவும் பெருமையாக இருப்பதாகவும் முதல்வர் அவர்களுக்கு தனது நன்றி என்றும் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒத்திவைக்கப்பட்ட ‘அகண்டா 2’ புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு.. பாலையா ரசிகர்கள் குஷி..!

நிவேதா பெத்துராஜ் திருமணம் நிறுத்தப்பட்டதா? காதலர் இன்ஸ்டா பக்கத்தை அன்ஃபாலோ செய்ததால் பரபரப்பு..!

ஜியோ ஹாட்ஸ்டார் தயாரிக்கும் 40 திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள்.. உதயநிதி முன் அறிமுக நிகழ்ச்சி..!

16 வருடங்களுக்கு பின் உருவாகும் '3 இடியட்ஸ் 2'.. அமீர்கான், கரீனா கபூர், மாதவன் நடிக்கிறார்களா?

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் மீண்டும் சந்திப்பு: என்றும் தொடரும் நட்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments