நோன்பை நோற்ற நாங்கள், சன்மானம் பெற்று மகிழுமாறு அருள் புரிய வேண்டும் - என வேண்டும் பாடல். (உன்னை) அடி பணியாதவர்களை வெல்கின்ற குணங்களை உடைய கோவிந்தா! உன்னைப் பாடி, உன்னிடம் நாங்கள் வேண்டுகின்ற பறையைப் பெற்று, அதன் பின்னும் நாங்கள் பெறும் சன்மானம் என்ன தெரியுமா?
உலகத்தில் உள்ளோர் புகழும் படியாக; கையில் அணியும் ஆபரணங்கள், தோளில் அணியும் பரணங்கள், காதில் அணியும் தோடு, காதை மேலும் அலங்காரம் செய்யும் ஆபரணங்கள், காலில் அணியும் ஆபரணங்கள்; -என்று சொல்லப்படும் பலவகையான ஆபரணங்கள் அணிவோம். (நீ அணிவிக்க) ஆடைகளை அணிவோம்.
அதன் பிறகு, பால் சோறு மறையும்படியாக நெய்யை ஊற்றி, அது முழங்கையில் வழியும்படியாக உண்டு, நீயும் நாங்களுமாகக் கூடி இருந்து குளிர வேண்டும்.