Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விநாயகருக்கு ஏற்ற விரதங்கள் என்னென்ன?

Mahendran
புதன், 8 மே 2024 (19:12 IST)
சதுர்த்தி விரதம்: ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்த்தி திதியில் விநாயகரை வழிபட்டு விரதம் இருப்பது. இதனால், காரியத் தடைகள் நீங்கி, நல்மதிப்பு உண்டாகும்.
 
வெள்ளிக்கிழமை விரதம்: வைகாசி வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி, ஒரு வருடம் முழுவதும் வரும் வெள்ளிக்கிழமைகளில் விநாயகரை வழிபட்டு விரதம் இருப்பது. இதனால், ஆயுள், ஆரோக்கியம் பெருகும்.
 
செவ்வாய் விரதம்: ஆடி மாத செவ்வாய் தொடங்கி, ஓராண்டு முழுவதும் வரும் செவ்வாய்க்கிழமைகளில் விநாயகரை வழிபட்டு விரதம் இருப்பது. இதனால், செவ்வாய் தோஷம் நீங்கி, நல்ல வளர்ச்சி ஏற்படும்.
 
சங்கடஹர சதுர்த்தி விரதம்: மாசி மாத தேய்பிறை சதுர்த்தி துவங்கி, ஒரு வருடம் முழுவதும் ஒவ்வொரு மாத தேய்பிறை சதுர்த்தியிலும் விநாயகரை வழிபட்டு விரதம் இருப்பது. இதனால், துன்பங்கள் நீங்கி, நல்வாழ்வு பெருகும்.
 
குமாரசஷ்டி விரதம்: கார்த்திகை மாத தேய்பிறை பிரதமை திதி முதல் மார்கழி வளர்பிறை சஷ்டி வரை 21 நாட்கள் விநாயகரை வழிபட்டு விரதம் இருப்பது. இதனால், பிள்ளைச் செல்வம், குடும்ப வளம் பெருகும்.
 
தூர்வா கணபதி விரதம்: கார்த்திகை மாத வளர்பிறை சதுர்த்தி அன்று விநாயகரை அருகம்புல் ஆசனத்தில் அமர்த்தி வழிபட்டு விரதம் இருப்பது. இதனால், வம்ச விருத்தி ஏற்படும்.
 
சித்தி விநாயக விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை 14-ம் திதியான சதுர்த்தசி திதியில் விநாயகரை வழிபட்டு விரதம் இருப்பது. இதனால், எதிரிகள் விலகி, வெற்றி பெறலாம்.
 
தூர்வாஷ்டமி விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி அன்று தொடங்கி விநாயகரை 1 ஆண்டு அருகம்புல்லால் அர்ச்சித்து விரதம் இருப்பது. இதனால், உடல் வலிமை உண்டாகும்.
 
விநாயக நவராத்திரி: ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியை தொடர்ந்து ஒன்பது நாட்கள் விநாயகரை வழிபட்டு விரதம் இருப்பது. இதனால், எல்லா நன்மைகளும் பெறலாம்.
 
வெள்ளிப்பிள்ளையார் விரதம்: ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில் விநாயகரை நேர்ந்து கொண்டு விரதம் இருந்து, நாம் கோருகின்ற பலனுக்கு ஏற்ப துதிகள் பாடி பலகார பட்சனங்கள் படைத்து வணங்குவது. இதனால், எண்ணங்கள் நிறைவேறும்.
 
செவ்வாய் பிள்ளையார் விரதம்: ஆடி மாத செவ்வாயன்று செய்யப்படுவது. இதனால், பெண்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேலூர் கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் .. சிலம்பாட்டம், மயிலாட்டம் பாரம்பரிய நடனங்கள்

இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்!- இன்றைய ராசி பலன்கள் (15.05.2025)!

இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு.. குவிந்த பக்தர்கள்..!

நெல்லை மாவட்டத்தில் உள்ள கடம்போடுவாழ்வு திருக்கோவில் பெருமைகள்..!

10 லட்சம் முறை கோவிந்த நாமம் எழுதி விஐபி தரிசனம்! - இளம்பெண் சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments