Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழனி தைப்பூச திருவிழா தெப்ப உற்சவத்துடன் நிறைவு.. பக்தர்கள் சாமி தரிசனம்..!

Mahendran
வெள்ளி, 14 பிப்ரவரி 2025 (18:32 IST)
பழனி மலையில் புகழ்பெற்ற தைப்பூச திருவிழா கடந்த 5ஆம் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நீடிக்கும் இந்த புனித நிகழ்வில், வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி வெள்ளி ஆட்டுக்கிடா, காமதேனு, யானை, தந்த சப்பரம், தோலுக்கிணியாள் உள்ளிட்ட வாகனங்களில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
 
கடந்த திங்கள்கிழமை திருக்கல்யாணம், வெள்ளி  தேரோட்டம் நடைபெற்றது. செவ்வாய்  மாலை நடைபெற்ற தேரோட்டத்திற்குப் பிறகும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர்.  
 
நேற்று இரவு, 9ஆம் நாள் விழா நிறைவாக, வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் வழங்கினார். 
 
இன்று, 10ஆம் நாள் நிகழ்ச்சியாக, தெப்பத் தேரோட்டத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதைத் தொடர்ந்து, இரவில் கொடியிறக்கம் நடைபெற்ற பிறகு திருவிழா நிறைவு பெறுகிறது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு கல்வி, தேர்வுகளில் கவனம் அவசியம்! - இன்றைய ராசி பலன்கள் (18.02.2025)!

சென்னிமலை முருகப்பெருமானின் திருத்தலத்தின் சிறப்புகள்..!

இந்த ராசிக்காரர்களுக்கு கடன் பாக்கிகள் வசூலாகும்! - இன்றைய ராசி பலன்கள் (17.02.2025)!

ஆதியோகி திருவுருவம் 112 அடியில் அமைக்கப்பட்டிருப்பதன் பின்னணி என்ன?

இந்த ராசிக்காரர்களுக்கு நீண்ட கால பிரச்சினைகளில் முடிவு கிடைக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (16.02.2025)!

அடுத்த கட்டுரையில்
Show comments