முத்துமாரியம்மன் கோவிலில் கொடியேற்றம் விழா கோலாகலம்..!

Senthil Velan
செவ்வாய், 12 மார்ச் 2024 (14:19 IST)
காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
 
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி  பங்குனி பால்குட பெருவிழா பிரசித்தி பெற்றதாகும். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவர். இந்த பால்குட பெருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் விழா கடந்த 27 தேதி  நடைபெற்றது.
 
அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.   காப்பு கட்டுதல் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

ALSO READ: மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை விழா - பக்தர்களின் அலை கடல் கூட்டம்

தொடர்ந்து 19 ம் தேதி திருக்கோயில் கரகம், மது, முளைப்பாரி ஊர்வலமும், 20 ம் தேதி காவடி, பூக்குழி, பால்குட பெருவிழாவும், அன்று இரவு காப்பு பெருக்குதலும், 21 ம் தேதி அன்னையின் திருவீதி உலா, 22 ம் தேதி சந்தனகாப்பு அலங்காரமும் நடக்கிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தை அமாவசையில் முன்னோருக்கு சமர்ப்பணம்!.. ராமேஸ்வரத்தில் குவிந்த மக்கள்!..

தைப்பொங்கல் தினத்தில் களை கட்டும் திருச்செந்தூர் முருகன் கோவில்... குவிந்த பக்தர்கள்..!

திருச்செந்தூரில் அலைமோதும் கூட்டம்!.. நீண்ட நேரம் காத்திருந்த சாமி தரிசனம்...

நாளை சூரிய பொங்கல் வைக்க எது நல்ல நேரம்?.. வாங்க பார்ப்போம்!...

தினமும் 3 லட்சம் பேருக்கு உணவு!.. பசியாற்றும் திருப்பதி தேவஸ்தான அன்னதான திட்டம்

அடுத்த கட்டுரையில்
Show comments