செங்கல்பட்டு : தங்களை சொந்த நாடு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரி செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 6 இலங்கை தமிழர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவக்கியுள்ளனர்.
இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள் சிவகிருஷ்ணன், சுப்பிரியா, ராஜேந்திரன், சேவியர், விஜய், இலங்கை நாதன் ஆகியோர் 2 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தல் வழக்கில் தொடர்பிருப்பதாகக் கூறி தமிழகக் காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 6 பேரும் தற்போது செங்கல்பட்டு கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அந்த 6 பேரும், தங்கள் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, தாங்கள் இலங்கை செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கு சரியான பதில் கிடைக்காததால் இந்த கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் 6 பேரும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.