Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சருமத்தின் நிறத்தை அதிகப்படுத்த உதவுகிறதா இந்த பூசணிக்காய்...?

Webdunia
பூசணியில் உள்ள என்சைம் மற்றும் ஆல்பா ஹைட்ராக்சி அமிலம் போன்றவை, இறந்த செல்களை நீக்கி சருமப் பொலிவை மேம்படுத்தும் தன்மை கொண்டவை. இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை, சுருக்கங்கள் வராமல் தடுத்து சருமத்தை மிருதுவாக்கும்.

பூசணியில் உள்ள சத்துக்கள் ‘கொலாஜென்’ உற்பத்தியை அதிகரிக்கும் திறன் கொண்டவை. இதன் மூலம் சருமம் இளமையாக இருக்கும்.
 
குறிப்பு 1: தோல் நீக்கிய பூசணி - 1 துண்டு, ஆப்பிள் சிடர் வினிகர் அரை தேக்கரண்டி, தேன்1 தேக்கரண்டி, ஒரு முட்டையின் வெள்ளைக் கரு ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும். சிறிய பாத்திரத்தில் விதை நீக்கப்பட்ட பூசணியைப் போட்டு நன்றாக மசித்துக்கொள்ளவும். அதில் மேலே குறிப்பிட்ட பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து, கலந்துகொள்ளவும். இந்தக் கலவையை 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
 
முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி துடைக்கவும். பின்னர் சிறிதளவு பூசணிக் கலவையை முகம், கழுத்து, கை மற்றும் கால்களில் பூசி மென்மையாக மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் கழித்து, பருத்தித் துணியை வெந்நீரில் நனைத்து பூசணிக் கலவையைத் துடைத்து எடுக்கவும். சில வினாடிகள் கழித்து, மீண்டும் மீதம் உள்ள பூசணிக் கலவையை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரால் கழுவவும். இதன் மூலம் முகம் மற்றும் கை, கால்களில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் மிளிரும்.
 
குறிப்பு 2: தோல் நீக்கிய பூசணி 1 துண்டு, தயிர் - 1 தேக்கரண்டி, ஊற வைத்துத் தோல் நீக்கி அரைத்த பாதாம் - 2 தேக்கரண்டி, தேன் - 1 தேக்கரண்டி, ஆலிவ் எண்ணெய் - 1 தேக்கரண்டி எடுத்துக்கொள்ளுங்கள்.

ஒரு பாத்திரத்தில் விதை நீக்கப்பட்ட பூசணியைப் போட்டு, ஆலிவ் எண்ணெய் ஊற்றி நன்றாக மசித்துக்கொள்ளவும். அதனுடன் தயிர், அரைத்த பாதாம், தேன் ஆகிய மூன்றையும் சேர்த்துக் கலந்துகொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் தடவி 25 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

IIRSI 2025 மாநாடு: மொரிஷியஸ் அமைச்சர் அனில் குமார் பச்சூ, தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தனர்!

மாதுளை தோலின் மகத்துவங்கள்: தூக்கி எறியும் முன் யோசியுங்கள்!

சர்க்கரைக்கு மாற்றாக வெல்லத்தை பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள்?

நீரிழிவு நோயாளிகளுக்கு நள்ளிரவில் பசி எடுத்தால் என்ன செய்ய வேண்டும்? பயனுள்ள டிப்ஸ்..!

நன்னாரி: உடலைக் காக்கும் அற்புத மூலிகை - அதன் மருத்துவப் பயன்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments