தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்ய வேண்டியது என்ன? செய்ய கூடாதது என்ன?

Mahendran
சனி, 2 ஆகஸ்ட் 2025 (18:00 IST)
வீட்டில் ஏற்படும் தீக்காயங்களுக்கு செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத முதலுதவிகள் குறித்த முக்கிய குறிப்புகள் இதோ.
 
செய்யக்கூடாதவை
 
தீக்காயம் மீது வெண்ணெய், மாவு, சமையல் சோடா போன்றவற்றைத் தடவ கூடாது.
 
மருத்துவர் ஆலோசனை இல்லாமல் ஆயின்மென்ட் அல்லது எண்ணெய் பயன்படுத்தக் கூடாது.
 
தீக்காயத்தால் ஏற்படும் கொப்புளங்களை நீங்களாகவே உடைக்கவோ, கிள்ளவோ கூடாது.
 
தோலுடன் ஒட்டிக்கொண்ட சிந்தெடி ஆடைகளை அகற்ற முயற்சிக்க வேண்டாம்.
 
தீக்காயம் மீது பனிக்கட்டியை நேரடியாக வைக்கக்கூடாது.
 
உடனடி முதலுதவி
 
காயம் பட்ட இடத்திலுள்ள நகைகளை உடனடியாக அகற்றிவிடுங்கள்.
 
காயம் பட்ட பகுதியை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
 
சிறு காயமாக இருந்தாலும், சுத்தமான துணியால் மூடி மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
 
முகம், கண் போன்ற பகுதிகளில் காயம் ஏற்பட்டால், தாமதிக்காமல் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.
 
முதியவர்கள், குழந்தைகள் ஆகியோருக்குச் சிறிய தீக்காயம் ஏற்பட்டாலும், சுய மருத்துவம் செய்யாமல் மருத்துவரை அணுகுவது பாதுகாப்பானது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முருங்கை கீரையின் மகத்துவமான பலன்கள்

ஆரோக்கிய அதிசயமான பாதாம் பருப்பின் முக்கிய நன்மைகள்!

மழையில் நனைந்தாலும் சளி பிடிக்காமல் தப்பிப்பது எப்படி? பயனுள்ள டிப்ஸ்..!

நுண்பிளாஸ்டிக் துகள்கள்: இரத்தக் குழாய்களில் படிவதால் மாரடைப்பு, பக்கவாதம் அபாயம் 4.5 மடங்கு அதிகம்!

முள்ளங்கியை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் பலன்கள்.. பயனுள்ள தகவல்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments