Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”குமாரசாமி வெட்கமே இல்லாமல் ஆட்சியை நீட்டிக்க முயல்கிறார்”…எடியூரப்பா ஆவேசம்

Webdunia
வெள்ளி, 19 ஜூலை 2019 (13:08 IST)
பெரும்பான்மையை இழந்துவிட்ட பிறகும் குமாரசாமி வெட்கமே இல்லாமல் ஆட்சியை நீட்டிக்க முயற்சிக்கிறார் என கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆவேசத்துடன் பேசியுள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி ஆட்சியில் இருக்கும் நிலையில் சில நாட்களுக்கு முன்பு 16 எம்.எல்.ஏ.க்கள் கட்சியிலிருந்து ராஜினாமா செய்தனர். இந்நிலையில் குமாரசாமி ஆட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது என்றும், ஆதலால் ஆட்சியை இனி தொடரமுடியாது என்றும் பாஜகவினர் குற்றம் சாட்டினர். இதனைத் தொடர்ந்து கூட்டணி அரசு, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற நிலையில் நேற்று சட்டசபையை கூட்டினர். ஆனால் கூட்டணி கட்சியின் தலைவர்களுக்கும் பாஜக தலைவர்களுக்கும் நேற்று சட்டசபையில் வாக்குவாதம் ஏற்பட்டதில் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, ஜனநாயகத்திற்கு அவமரியாதையை அளிக்கும் வகையில் காங்கிரஸ்- ஜனதா தளம் உறுப்பினர்கள் நடந்து கொள்கின்றனர் என்றும், சபையின் நேரத்தை விரயமாக்கி கூட்டணி அரசை காப்பாற்ற முயல்கின்றனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், பாஜகவிற்கு 105 எம்.எல்.ஏக்கள் இருக்க, ஜனதா தளம் கூட்டணி வெறும் 99 உறுப்பினர்கள் தான் உள்ள நிலையில், வெட்கமே இல்லாமல் குமாரசாமி ஆட்சியை நீடிக்க வழி செய்கிறார் என எடியூரப்பா ஆவேசமாக பேசியுள்ளார்.


கூட்டணி அரசின் மோசமான செயல்பாடுகளை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு இப்போதைக்கு ஜாமீன் இல்லை.! ஜூலை 10 வரை காத்திருக்க வேண்டும்.!!

நெல்லை ஜெயக்குமார் மரணம்.. கூடுதலாக 10 தனிப்படைகள்.. புதிய அதிகாரிகள் சேர்ப்பு..!

தொடர் சரிவில் பங்குச்சந்தை.. ஜூன் 4க்கு பின்னராவது உயருமா?

தங்கம் விலை இன்று திடீர் உயர்வு.. ஒரே நாளில் ரூ.560 உயர்ந்ததால் அதிர்ச்சி..!

மே 18-20.. 3 நாட்களுக்கு மிக கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments