Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்து‌க்கு வெடிகு‌‌ண்டு ‌மிர‌ட்ட‌‌ல்

செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்து‌க்கு வெடிகு‌‌ண்டு ‌மிர‌ட்ட‌‌ல்
, வியாழன், 11 டிசம்பர் 2008 (17:12 IST)
செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌‌ வளாக‌த்‌தி‌ல் உ‌ள்ள மூ‌ன்று ‌நீ‌‌திம‌ன்ற‌த்‌தி‌‌ல் கு‌ண்டுவெடி‌க்கு‌ம் எ‌ன்று வ‌ந்த தொலைபே‌சி மிர‌‌ட்ட‌லா‌ல் அ‌‌ங்கு பெரு‌ம் பரபர‌ப்பு ஏ‌ற்ப‌ட்டது.

செ‌ன்னை எ‌ஸ்‌பிளனேடு காவ‌‌ல்‌நிலைய‌த்து‌க்கு இ‌ன்று ‌பி‌ற்பக‌ல் 12 ம‌ணி‌க்கு ஒரு ம‌ர்ம தொலைபே‌சி அழை‌ப்பு வ‌ந்தது. அ‌தி‌ல் பே‌சிய அ‌ந்த ம‌ர்ம நப‌ர், செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ வள‌ாக‌த்த‌ி‌ல் உ‌ள்ள பெருநகர ‌நீ‌திம‌ன்ற‌ம், குடு‌ம்ப நல ‌நீ‌திம‌ன்ற‌‌ம், ‌சி‌றிய வழ‌க்குகளை ‌விசா‌ரி‌க்கு‌ம் ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல் 30 ‌நி‌மிட‌த்‌தி‌ல் கு‌ண்டுவெடி‌க்கு‌ம் எ‌ன்று கூ‌றி‌‌வி‌ட்டு அழை‌ப்பை து‌ண்டி‌த்து ‌வி‌ட்டா‌ன்.

இதை‌த் தொட‌ர்‌ந்து காவ‌ல்துறை‌‌யின‌ர் மோ‌ப்ப நா‌ய்களுட‌ன் ‌விரை‌ந்து வ‌ந்து சோதனை நட‌த்‌தின‌ர். 90 ‌நி‌மிட‌ம் நட‌ந்த சோதனை‌க்கு ‌பிறகு அது வெறு‌ம் புர‌ளி எ‌ன்று தெ‌ரியவ‌ந்தது.

இ‌ந்த வெடிகு‌ண்டு ‌மிர‌ட்டலா‌ல் ‌நீ‌திம‌ன்ற‌ ப‌ணிக‌ள் எதுவு‌ம் பா‌தி‌க்க‌ப்பட‌வி‌ல்லை.

Share this Story:

Follow Webdunia tamil