Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மானிய விலையை கட்டுப்படுத்த மண்ணெண்ணெய் விலை உயர்வு

Webdunia
வெள்ளி, 15 ஜூலை 2016 (10:50 IST)
மானிய விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு மண்ணெண்ணெய்  விலையை உயர்த்தியுள்ளது.


 

 
எண்ணெய் நிறுவனங்கள் மண்ணெண்ணெய் விலையை மாதந்தோறும் 25 பைசா வீதம் உயர்த்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 
 
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் மானிய சுமையைக் குறைக்கும் விதமாக மத்திய அரசு இந்த அனுமதியை வழங்கியுள்ளது. இதன்படி மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு 25 பைசா வீதம் 10 மாதங்களுக்கு உயர்த்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
 
இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் மண்ணெண்ணெய் விலை உயர்வை, மத்திய அரசு உடனே ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
 
இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது:-
 
ஏழை மக்களை கடுமையாக பாதிக்கும் இந்த விலை உயர்வை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மண்ணெண்ணெய் விலை உயர்வை உடனே ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
எளிய மக்களின் வீடுகளில் எரிந்து கொண்டிருக்கும் விளக்கையும் அனைத்துவிட மத்திய அரசு முயல்வது கண்டனத்திற்குரியதாகும். இந்த விலை உயர்வை மத்திய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும் என தெரிவித்துள்ளனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

‘நான்கு தலைமுறை வாழ்ந்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு எங்கே போவது?’ - தொழிலாளர்கள் சொல்வது என்ன?

நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments