ஆதார், மொபைல் எண் இணைப்பு: நீட்டிக்கப்படுமா காலக்கெடு??

Webdunia
திங்கள், 27 நவம்பர் 2017 (20:35 IST)
வங்கி கணக்கு, செல்போன் எண் ஆகியவற்றுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31 ஆம் தேதிக்கு தள்ளிபோகும் என்று தெரியவந்திருக்கிறது. 
 
மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டாலும் சேவை துண்டிக்கப்படாது என தொலைத்தொடர்பு துறை அறிவித்துள்ள நிலையிலும், மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. 
 
இதையடுத்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு தங்களது மொபைல் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க குறுஞ்செய்தி அனுப்பி வருகிறது. மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கடைசி என அறிவிக்கப்பட்டது. 
 
இந்நிலையில், வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31 ஆம் தேதியும், செல்போன் எண்ணுடன் இணைக்க பிப்ரவரி 6 ஆம் தேதியும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்க தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையின் கடுமையான நிபந்தனைகள்

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments