Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொத்தின் 10%; ரூ.7000 கோடியை என்ன செய்தார் தெரியுமா ஏர்டெல் நிறுவனர்??

Webdunia
வெள்ளி, 24 நவம்பர் 2017 (18:43 IST)
பார்தி குடும்பத்தின் 10 சதவீத சொத்துக்கள் பொது சேவைக்காக வழங்கப்படும் என சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார்.
 
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல்லின் நிறுவனர் பொது சேவைக்காக சொத்துக்கள் வழங்கப்படுவது குறித்து தகவல் வெளியிட்டுள்ளார். 
 
சமூக சேவைகளில் ஈடுபட்டிருக்கும் பார்தி பவுன்டேஷன் அமைப்பிற்காக பார்தி குடும்பத்தின் 10 சதவீத சொத்துகள், அதாவது  ரூ.7,000 கோடி ஒதுக்கப்படும் என்று கூறினார். 
 
இந்த 10 சதவீத சொத்துகளில், குடும்பத்தின் வசமுள்ள பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் 3 சதவீத பங்குகள் ஒதுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 
 
பார்தி குழுமம் சமூகத்தில் பொருளாதார நிலையில் பின் தங்கியுள்ள இளைஞர்களின் இலவச கல்விக்காக சத்ய பார்தி பல்கலைக் கழகத்தை துவங்கவுள்ளது.
 
இந்த பல்கலைக் கழகம் அறிவியல் தொழில்நுட்ப கல்விக்கு முன்னுரிமை அளிக்கும். குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், இணையதள புத்தாக்கம் போன்ற கல்விக்கு முன்னுரிமை அளிக்குமாம்.
 
இந்த பல்கலைக் கழகத்தில் ஒரே நேரத்தில் 10,000 மாணவர்கள் கல்வி கற்கும் வசதி இருக்கும். ஆனால், பல்கலைக்கழகம் எங்கு துவங்கப்படும் என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments