Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கி சேமிப்பு கணக்கு: வாரம் 50,000 ரூபாய்!!

Webdunia
வியாழன், 9 பிப்ரவரி 2017 (10:41 IST)
வங்கிச் சேமிப்பு கணக்கில் 24,000 ரூபாயாக இருந்த பணம் எடுக்கும் உச்ச வரம்பு, தற்போது 50,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.


 
 
கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வங்கிகள் மற்றும் ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. 
 
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதியிலிருந்து நடப்புக் கணக்கில் பணம் எடுக்க இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சகம் அறிவித்தது. 
 
ஆனால் சேமிப்புக் கணக்கில் வாரம் 24,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு தொடர்ந்து வந்தது. இந்நிலையில் சேமிப்பு கணக்கில் இனி வாரம் தோறும் 50,000 ரூபாய் வரை எடுத்துக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
 
வரும் மார்ச் 13 ஆம் தேதி முதல் எந்த கட்டுப்பாடுகளும் இன்றி, எவ்வளவு வேண்டுமானாலும் சேமிப்புக் கணக்கில் பணம் எடுத்துக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments