ஜியோவின் வங்கி சேவை: எஸ்பிஐயுடன் கூட்டணி!

Webdunia
வெள்ளி, 3 ஆகஸ்ட் 2018 (15:12 IST)
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் யாரும் எதிர்பாராத புதிய அற்விப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வழக்கமாக ஜியோ அறிவிப்புகள் சலுகைகளை பற்றி இருக்கும் என நினைத்த நிலையில், இந்த அறிவிப்பு இதற்கு மாறானதாக இருக்கிறது.
ஆம், ஜியோ நிறுவனம் வங்கி சேவை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே, தொலைத்தொடர்பு, கேபில் டிவி, போன் தயாரிப்பு என ஈடுப்பட்டு வரும் ஜியோ அடுத்து வங்கி சேவையில் களமிறங்கவுள்ளது. 
 
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் எஸ்பிஐ வங்கி இணைந்து அடுத்த தலைமுறைக்கான வங்கி சேவையினை அறிமுகம் செய்துள்ளது. இது ஜியோ பிரைம், எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் பரிவர்த்தனையினை அதிகரிக்க உதவும்.
 
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது மைஜியோ செயலியில் எஸ்பிஐ யோனோ சேவைனையும் ஒருங்கிணைத்து வழங்க உள்ளது. இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இன்னும் ஓரிரு மாதங்களில் இதனை வாடிக்கையாளர்களின் செயல்பாட்டிற்கு வந்துவிடும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நிமிடத்திற்கு ரூ. 8 கோடி இழப்பு! பெரும் இழப்பை சந்திக்கும் துபாய்.. என்ன காரணம்?

10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு! மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமா?

ஓமன் எண்ணெய் கப்பலை தாக்கிய ஈரான்.. கொழுந்துவிட்டு எரியும் கப்பல்.. 15 இந்திய ஊழியர்களின் கதி என்ன?

அமெரிக்காவின் முக்கிய பிரமுகர் தவெகவில் இணைகிறாரா? செங்கோட்டையன் சொன்னது என்ன?

பிரதமர் எத்தனை முறை தமிழகம் வந்தாலும் தமிழக மண் பாஜகவுக்கு இடமளிக்காது: செல்வபெருந்தகை

அடுத்த கட்டுரையில்
Show comments