Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜியோ-வின் அடுத்த 6 புரட்சி: என்னவென்று தெரியுமா??

Webdunia
செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (10:03 IST)
வரம்பற்ற டேட்டா மற்றும் வாய்ஸ் சேவைகளை வழங்கிய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் டிடிச் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.


 
 
இலவச டேட்டா, வாய்ஸ் கால்கள் என இலவச சேவைகளை வாரி வழங்கும் ஜியோ நிறுவனம் அதன் புதிய பயனர்களுக்காக 6 எனத்தொடங்கும் மொபைல் எண்கள் ஒதுக்க அனுமதி பெற்றுள்ளதாக தெரிகிறது. 
 
தொலைத் தொடர்புத் துறை (DOT) ஆனது இதுபோன்றதொரு அனுமதியை முதல் முறையாக ரிலையன்ஸ் ஜியோவிற்கு வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதன் மூலம் 6 சீரிஸ் எம்எஸ்சி (மொபைல் நிலைமாற்றம் குறியீடு) தொலைபேசி எண்களை வெளியிடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
அசாம், ராஜஸ்தான், மற்றும் தமிழ்நாட்டில் இந்த 6 சீரிஸ் எம்எஸ்சி குறியீடுகள் வழங்கப்பட உள்ளது. மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத்தில் 7 சீரிஸ் எம்எஸ்சி குறியீடுகளும், கொல்கத்தா மற்றும் மகாராஷ்டிராவில் 8 சீரிஸ் எம்எஸ்சி குறியீடுகளும் பெற்றுள்ளது.
 
இந்த 6 சீரிஸ் மொபைல் எண்களை அறிமுகம் செய்வதின் மூலம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தினால் மாநிலங்களை அடிப்படையாக கொண்ட சேவைகளில் முன்னோக்கி செல்லமுடியும் என தெரிகிறது.

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments