Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூபாய் நோட்டுகளில் காந்தி படம் மட்டுமே இடம்பெறும் - ரகுராம் ராஜன்

Webdunia
செவ்வாய், 12 ஆகஸ்ட் 2014 (15:12 IST)
இந்திய ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியை தவிர வேறு யாருடைய உருவ படமும் இடம்பெற வாய்ப்பில்லை என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

மும்பையி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கூறுகையில், “ரூபாய் நோட்டில் அச்சடிக்கும் அளவுக்கு இந்தியாவில் எத்தனையோ சிறந்த தலைவர்கள் உள்ளனர். ஆனால், அவர்களின் உருவங்களை ரூபாய் நோட்டுகளில் அச்சடித்தால் சர்ச்சை உருவாகும் என்பதை உணர்ந்துள்ளோம்.

அதற்கு ஒரு உதாரணம் உள்ளது, விளையாட்டுத் துறைக்கு என பல்வேறு விருதுகள் இருக்கும் போது, விளையாட்டு வீரர் ஒருவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது.

அதனால், யாரின் உருவப்படம் ரூபாய் நோட்டில் இடம்பெற்றாலும், அது ஏதேனும் ஒரு விதத்தில் சர்ச்சையை ஏற்படுத்தும். எனவே, நாட்டில் உள்ள உயர்ந்த தலைவர்களில் எல்லாம் சிறந்தவரான மகாத்மா காந்தியைத் தவிர யாருடைய உருவப் படத்தையும் ரூபாய் நோட்டுகளில் அச்சிடும் எண்ணம் இல்லை“ என்று ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments