Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50 கோடி ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ள மத்திய அரசு

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (12:28 IST)
மேட் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 2020ஆம் ஆண்டு இறுதியில் இந்தியாவின் செல்போன் உற்பத்தி 50 கோடியாக அதிகரிக்கும் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


 

 
மேட் இன் இந்தியா திட்டத்தின் கீழ் பிற நாட்டு செல்போன் நிறுவனங்கள் இந்தியாவிலே உற்பத்தி செய்து வருகின்றனர். இதனால் இந்தியாவின் சந்தை மேம்படுவதோடு, வேலை வாய்ப்பும் அதிகரிக்கும். ஆப்பிள் நிறுவனம் அண்மையில் மேட் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் தற்போது மேட் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 2020ஆம் ஆண்டு இறுதியில் செல்போன் உற்பத்தி 50 கோடியாக அதிகரிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தகவல் தொழில்நுட்பத் துறையின் இணைச் செயலாளரான அஜய்குமார் கூறியதாவது:-
 
2014ஆம் ஆண்டு நிதியாண்டில் இந்தியாவில் 6 கோடி செல்போன்கள் தயாரிக்கப்பட்டது. இந்த எண்ணிக்கை 2016-2017 ஆம் நிதியாண்டில் 17.5 கோடியாக அதிகரித்தது 2020ஆம் ஆண்டில் உற்பத்தி மேலும் அதிகரித்து இதன்மூலம் எண்ணிக்கை 50 கோடியாக உயரும் என்றார்.
 
இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு கடந்த சில ஆண்டுகளாக வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் ஸ்மார்ட்போன் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. தற்போது உள்ள நிலையில் 2020ஆம் ஆண்டு இறுதிக்குள் 35% உற்பத்தி அதிகரிக்கும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்கு அஞ்சி இன்னொரு மாணவி தற்கொலை.. என்ன செய்யப் போகிறது அரசு? ராமதாஸ்

தர்பூசணியில் ரசாயனம்.. விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட அதிகாரி இடமாற்றம்..!

அண்ணா சிலை மீது பா.ஜ.க கொடி.. தஞ்சாவூரில் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

இந்தியாவிலேயே மிக அதிக பொருளாதார வளர்ச்சி பெற்ற தமிழ்நாடு: முதல்வர் பெருமிதம்..!

தமிழகத்தில் பரவி வரும் ‘தக்காளி காய்ச்சல்’.. குழந்தைகள் ஜாக்கிரதை என எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments