ஆதார் அட்டை மூலம் பண பரிவர்த்தனை செய்யலாம் என்று செய்திகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன.
ஒருவர் ஆதார் அட்டை உதவியுடன் பண பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்றால் வங்கி கணக்கில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.
# ஏதேனும் ஒரு வங்கி தொடர்பாளரின் உதவியுடன் வங்கி கணக்கில் உள்ள பணம் எவ்வளவு என்று அறிந்துகொள்ளலாம்.
# பணம் டெப்பசிட் செய்யலாம், பணத்தை எடுக்கலாம் மற்றும் ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பலாம் மற்றும் பெறலாம்.
# ஆதார் அட்டை மூலம் பண பரிவர்த்தனை செய்ய ஆதார் எண் மற்றும் கைவிரல் ரேகை இரண்டையும் உள்ளிட்டால் போதும்.
# ஆதார் அட்டை மூலம் பண பரிவர்த்தனை செய்யும் முறை அறிமுகப்படுத்த முக்கிய காரணம் வங்கியின் மைக்ரோ ஏடிஎம் சேவை மூலம் கிராம மக்கள் நிதி பரிவத்தனைக்காகவே.
# இந்தப் பரிவர்த்தனை முறையைப் பயன்படுத்துவதன் மூலம் வங்கிகளின் உதவியால் பண பரிவத்தனையின் போது பாதுகாப்பாக இணைந்து செயலாற்ற இயலும்.