Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடராகு‌‌ம் ராஜேஷ‌்குமா‌ரி‌ன் நாவ‌ல்க‌ள்

Webdunia
சனி, 3 ஏப்ரல் 2010 (13:04 IST)
‌ பிரபல நாவ‌ல் ஆ‌சி‌ரிய‌ர் ராஜேஷ‌்குமா‌ர் எழு‌திய ‌‌தி‌கி‌ல் நாவ‌ல்க‌ள் தொடராக எடு‌க்க‌ப்ப‌ட்டு கலைஞர் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பா‌கி வரு‌கிறது. இ‌ந்த தொட‌ர்க‌‌ள் விசாரணை எ‌ன்ற பெய‌ரி‌ல் ஒ‌ளிபர‌ப்பா‌கி ரசிகர்களு‌க்கு ‌தி‌கிலூ‌ட்டி வருகிறது.

ராஜேஷ்குமாரின் நாவல்கள் ஒவ்வொன்றும் திகிலானவை, த்ரில்லானவை. நாவல்களை படிக்கும் போது ஏற்படும் திரில்லும், திகிலும் அவை டி.வி.தொடர்களாக தயாரிக்கப்படும் போது காணாமல் போய்விடும். ஆனால் விசாரணை தொடரை இயக்கும் சி.பிரபுவோ ராஜேஷ்குமாரின் நாவல்களுக்கு கூடுதல் சுவையைக் கொடுத்து விசாரணை தொடரை அமர்க்களப்படுத்தி வருகிறார்.

சென்ற வாரம் ஒளிபரப்பான `காற்று உறங்கும் நேரம்' என்னும் நாவல் படமாக்கப்பட்ட விதமும் பின்னணி இசையும் ரசிகர்களை ரொம்பவே பயமுறுத்தி விட்டது.

இதுவரை ராஜேஷ்குமார் எழுதிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாவல்களில் பல நாவல்கள் வெளிநாட்டுப் பின்னணியில் எழுதப்பட்டவை. அந்த நாவல்களையும் படமாக்கும் எண்ணத்தில் இருக்கிறார்கள் தயாரிப்பாளர் விஜயகுமார், மற்றும் டி.வி.சால்வா.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

Show comments