போட்டோகிராஃபிங்கிறது பெரிய ஆர்ட் - இளையராஜா பேட்டி
, புதன், 22 ஜனவரி 2014 (11:22 IST)
இளையராஜா தான் எடுத்தப் புகைப்படங்களில் தேர்ந்தெடுத்த 101 புகைப்படங்களை கண்காட்சியாக வைத்துள்ளார். சென்ற 15 ஆம் தேதி தொடங்கிய கண்காட்சி இன்றுடன் நிறைவுறுகிறது. இந்த நிகழ்வை முன்னிட்டு பத்திhpகையாளர்களை சந்தித்த இளையராஜா நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
நீங்க எடுத்த எல்லா புகைப்படங்களையும் இங்கே வைத்திருக்கிறீர்களா...?1978
லயிருந்து என்னென்ன கேமரா hpலீஸ் பண்ணுனாங்களோ அதையெல்லாம் வாpசையா வாங்கினேன். அப்போதிருந்து டிஜிட்டல் போட்டோகிராஃபி வர்றவரைக்கும் நான் படங்கள் எடுத்திருக்கேன். எத்தனைன்னு கணக்கில்லை. அத்தனையும் இங்க (கண்காட்சி) வரலை. அம்மாவை எடுத்த புகைப்படம் பற்றி...?ஒருநாள் வொர்க்குக்கு போய்கிட்டிருக்கிறப்போ - பொதுவா எனக்கு எதுவும் வராது, ஒருநாள் தலைவலி வந்திடிச்சி. தலைவலிக்காக ஒரு டாக்டர் வந்தார். டாக்டர் வந்ததும் அம்மா அழ ஆரம்பிச்சிட்டாங்க. இதுக்கு போய் அழறீங்களேன்னு அவங்களை ஒரு போட்டோ எடுத்தேன். அப்படி எடுத்ததுதான் அம்மா படம். இந்தப் புகைப்படங்களை எப்போது எப்படி எடுத்தீர்கள்...?
இதுவொரு ஆர்ட். பெரிய ஆர்ட். இந்த போட்டோகிராஃபியில முக்கியமான விஷயம் நான் கீழ இறங்கி படம் எடுக்க முடியறதில்லை. கூட்டம் வந்திடும். இதெல்லாம் நான் ட்ராவல் பண்றப்போ எடுத்தது. ஆந்திரா, கர்நாடகான்னு வெளியூர்ல எடுத்தது மட்டும் நான் இறங்கி அல்லது அங்குள்ள கோவிலுக்குள்ள போய் அல்லது அதுக்கு வெளியே எடுத்ததாக இருக்கும். அங்கக்கூட வெளியே இறங்கி எடுத்தப்போ கூட்டங்கள் வந்தது. கர்நாடகாவுலயாகட்டும், ஆந்திராவுலயாகட்டும் வந்து கண்டுபிடிச்சிடறhங்க .