தமிழ்நாட்டில் பரவலாக கேட்கிற சோகக்குரல்தான் இது. முன்னணி நடிகர்களின் படங்களைத் தவிர மற்றவர்களின் படங்கள் மூன்று நாளை தாண்டவே முக்குகிறது. இது ஒருபுறம் என்றால்,
அவுட்டோர் போகவே முடியலைங்க. ஸ்டார்ஸை பார்க்க ஆயிரக்கணக்கில் வண்டி கட்டிட்டு வந்திடுறாங்க என்ற புலம்பல் இன்னொரு பக்கம். கண்ணனின் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படப்பிடிப்பிலும் அதுதான் நடந்தது.
இந்தப் படத்தில் ரயிலும் ஒரு கதாபாத்திரமாக வருகிறது. நிறைய காட்சிகள் ரயிலில்தான். இதற்காக மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வாங்கியிருந்தனர். பாடல் காட்சியை படமாக்கையில் ப்ரியா ஆனந்தையும், விமல், சூரியையும் பார்க்க ரசிகர்கள் கூடிவிட்டனர். பக்கத்து ஊர்களில் இருந்தெல்லாம் லாரியில் வந்தவர்கள் மட்டும் ஒன்றரை லட்சம் பேர் இருப்பார்கள் என்றார் கண்ணன் (கட்சி மாநாட்டுக்கே இப்போ அவ்வளவு பேர் கூடுறதில்லையே).