ஐயோ... தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்தாகணுமே
, புதன், 12 மார்ச் 2014 (13:05 IST)
அரசியலுக்கு வருவேன் என்று கொஞ்ச காலமாக பயங்காட்டி வருகிறார் நமிதா. சமீபமாக அவரின் இந்த பூச்சாண்டி விளையாட்டு அதிகமாகியுள்ளது. தமிழின் பிரபல தினசரிக்கு கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன் என பேட்டி தந்துள்ளார்.
அந்த பேட்டியில், 3 கட்சிகளிடமிருந்து தனக்கு அழைப்பு வந்துள்ளதாகவும். எந்தக் கட்சியில் சேர்வது என்பதை இப்போது சொல்ல மாட்டேன். நல்ல விஷயங்களை அது நடப்பதற்கு முன்பே வெளியே சொல்லக் கூடாது என என் அம்மா சொல்லியிருக்காங்க என்று கூறியுள்ளார்.
தனக்கு தேசிய அரசியலில் விருப்பமில்லை. என் உயிர் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது என்றும் கூறியுள்ளார். தமிழ்நாட்டுக்கு வந்து 11 வருடங்களாகிறது. இன்னும் தமிழ் மக்கள் என்னை மறக்கவில்லை, என் மீது அன்பு செலுத்துகிறார்கள். அவர்களுக்கு எதாவது நான் செய்ய வேண்டும். அதை அரசியலில் வந்து செய்ய ஆசைப்படுகிறேன் என்று உணர்ச்சிவசப்பட்டுள்ளார்.