நீலப்படத்தில் நடித்து வந்த சன்னி லியோனை ஜிஸம் 2-வில் நடிக்க வைத்து இந்திப் படவுலகம் புண்ணியம் கட்டிக் கொண்டது. அடுத்து ஜாக்பாட் என்ற படத்தில் நடித்தார். அதையடுத்து அவர் நடித்துள்ள படம் ராகினி எம்எம்எஸ் 2. ஏக்தா கபூர் தயாரித்திருக்கும் இதன் முதல் பாகம் பாராநார்மல் ஆக்டிவிட்டியின் தழுவல்.
ராகினி எம்எம்எஸ் 2-வில் சன்னி லியோனின் கவர்ச்சியை நம்பி களத்தில் இறங்கியிருக்கிறார்கள். சன்னி லியோனின் அரைகுறை படங்களைப் போட்டு படத்தை விளம்பரப்படுத்தியவர்கள் தற்போது சன்னியும், சந்தியா மிர்துள் என்ற நடிகையும் உதட்டோடு உதடு பதித்து முத்தம் தரும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.
மார்ச் 21ஆம் தேதி ராகினி எம்எம்எஸ் 2 வெளியாகிறது. அதற்குமுன் மேலும் பல சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் ஏக்தா கபூரால் வெளியிடப்படலாம். இந்தப் படத்தைப் பொறுத்தவரை ஏக்தா கபூர் சன்னியின் சதையை நம்பிதான் தூண்டிலையே வீசியிருக்கிறார்.