இந்நிலையில் ரஜினியின் அடுத்தப் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்க ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார், ஒளிப்பதிவு ரத்தினவேலு, அனுஷ்கா ஹீரோயினாக நடிக்கக்கூடும் என்ற செய்தி காட்டுத்தீயாக பரவி வருகிறது.
இந்த செய்தியை சம்பந்தப்பட்டவர்கள் இதுவரை ஒத்துக் கொள்ளாதது போலவே மறுக்கவுமில்லை. இப்போது மேலும் ஒரு செய்தி. ரஜினியின் அடுத்தப்பட வில்லன் கன்னட நடிகர் சுதீப்.
நான் ஈ படத்துக்குப் பிறகு தமிழில் ஹீரோவாக நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார் சுதீப். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க அவர் சம்மதமும் கூறியிருந்தார். இப்படியொரு சூழலில்தான் கே.எஸ்.ரவிக்குமார் ரஜினியை வைத்து இயக்கும் படத்தில் சுதீப் வில்லன் என்ற புதுத்தகவல்.
நான் ஈ வெளியான போது படத்தைப் பார்த்த ரஜினி, வில்லத்தனத்தில் சுதீப் என்னையே மிரட்டிவிட்டார் என பாராட்டியதும், ரஜினிக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என சுதீப் தனது விருப்பத்தை வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.