இந்த சந்தேகத்தை எழுப்பியவர்களுக்கு ஆச்சரியமான விளக்கம் கிடைத்துள்ளது.
வாலு படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து கொண்டிருந்த போதுதான் சிம்பு இந்த அறிவிப்பை தனது பிஆர்ஓ மூலம் வெளியிட்டார். அப்போது சிம்புவுடன் ஹன்சிகாவும் படப்பிடிப்பு தளத்தில் இருந்துள்ளார். பிரிவை அறிவிக்கும் போதே ஹன்சிகா உடனிருந்தார் என்றால் பிரிவு அறிவிப்புக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்க என்ன தடை இருக்க முடியும் என்று படயூனிட் எதிர்கேள்வி கேட்கிறது.
தொழில் விஷயத்தில் இரண்டு பேருமே பக்கா புரபஷனல் என்று யூனிட்டே சர்ட்டிபிகேட் தருகிறது. காதலையும் அப்படிதான் அணுகியிருப்பார்களோ?