தேசிய விருது பெற்றவர்களிடையே பிரிவு
, புதன், 5 மார்ச் 2014 (17:35 IST)
ஆரண்யகாண்டம் படத்துக்காக சிறந்த எடிட்டருக்கான தேசிய விருது பெற்றவர்கள் பிரவீண் ஸ்ரீகாந்த். இன்றைய தேதியில் தமிழின் சிறந்த எடிட்டர்களில் இவர்களும் ஒ(இ)ருவர்.
வெங்கட்பிரபுவின் படங்களுக்கு இவர்கள்தான் தொடர்ந்து எடிட்டராக பணிபுரிந்து வந்தார்கள். சென்னை 28, சரோஜா, மங்காத்தா, பிரியாணி எல்லாமே இவர்களின் கத்திரிக்கோல்வண்ணம்தான்.என்னப் பிரச்சனையோ இனி இருவரும் தனித்தனியாக இயங்குவது என்று முடிவு செய்துள்ளனர். இனி வரும் காலங்களில் இவர்கள் இருவரில் யாரை வெங்கட்பிரபு பயன்படுத்துவார்? எதுக்கு வம்பு என்று இவர்கள் இருவரையும் தவிர்த்து மூன்றாவது ஒரு எடிட்டரை நாடுவாரா?பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.