சாமி, வசந்தபாலன், பாலா, மணிரத்னம், சீனு ராமசாமி என்று முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கு வசனம் எழுதிய ஜெயமோகனை கமல் இதுவரை பயன்படுத்தாதது பலருக்கும் ஆச்சரியம். ஜெயமோகனை ஏன் கமல் ஒதுக்குகிறார்?
இந்த கேள்விக்கு பதிலாக கமலின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்டதையும், வேறு முக்கியமான விருந்தாளிகள் இருந்த போதும் தன்னிடம் இலக்கியம் குறித்து அதிக நேரம் கமல் பேசியதையும் ஜெயமோகன் தனது இணையத்தில் எழுதினார்.
அவரது புத்தகங்களை கமல் சுடச்சுட படித்து வருவதையும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் கமல் நடிக்கும் த்ரிஷ்யம் தமிழ் ரீமேக்கிற்கு ஜெயமோகன் வசனம் எழுதயிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை ஜீத்து ஜோசப் இயக்குகிறார். மற்ற விவரங்கள் இன்னும் முடிவாகவில்லை.
உத்தம வில்லன் முடிந்ததும் த்ரிஷ்யம் ரீமேக் ஆரம்பமாகும்.