Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அம்மான்னாலும் சும்மா இருக்க மாட்டேன்

அம்மான்னாலும் சும்மா இருக்க மாட்டேன்
, திங்கள், 3 மார்ச் 2014 (14:10 IST)
FILE
இப்படி சூடாக பேசியிருப்பவர் சமீபத்தில் தாயான நடிகை பூமிகா.

பூமிகா, பரத் தாகூர் தம்பதிக்கு இரண்டு வாரங்கள் முன்பு ஆண் குழந்தை பிறந்தது. அதனை தற்போதுதான் தெரியப்படுத்தியுள்ளார் பூமிகா. விரைவில் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடத்தயிருப்பதாகவும் கூறியுள்ளார்.

தாயான நிலையில் அவpடம், அம்மாவாயிட்டீங்க இனி நடிப்பீர்களா என்று கேட்கப்பட்டது.

அம்மாவானால் என்ன. நடிக்கக் கூடாதா? கர்ப்பமாக இருக்கும் போதே நடித்தேன். அடுத்து லட்டு பாபு என்கிற படத்தில் நடிக்கயிருக்கிறேன். எனக்குப் பிடித்த படம், கேரக்டரில் மட்டுமே நடிப்பேன். இந்த பாலிசியில் மட்டும் மாற்றம் இருக்காது என்று கூறினார்.

பூமிகா கடைசியாக நடித்தப் படம் தங்கர்பச்சானின் களவாடிய பொழுதுகள். பிரபுதேவா, பூமிகா நடித்த இப்படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil