Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீப்பொறி பறக்க நடந்த நயன்தாராவின் நண்பேன்டா படப்பிடிப்பு

தீப்பொறி பறக்க நடந்த நயன்தாராவின் நண்பேன்டா படப்பிடிப்பு
, திங்கள், 3 மார்ச் 2014 (11:09 IST)
உதயநிதி, நயன்தாரா நடிக்கும் நண்பேன்டா படத்தின் படப்பிடிப்பில் மின் கம்பிகள் உரசி தீப்பொறி கிளம்பியதால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
FILE

இது கதிர்வேலன் படத்தைத் தொடர்ந்து உதயநிதியும், நயன்தாராவும் நண்பேன்டா படத்தில் இணைந்து நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு ஏழு தினங்கள் முன்பு ஸ்ரீரங்கத்தில் தொடங்கியது.

ஸ்ரீரங்கம் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் கடைகள் அமைத்து படப்பிடிப்பை நடத்தினர். இந்த ஷெட்யூல்டில் உதயநிதியும், நயன்தாராவும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் படப்பிடிப்பில் சூரிய ஒளியை மறைக்க அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் மின்கம்ப ஒயர்களில் உரசியதால் தீப்பொறி கிளம்பியது. மாடிகளில் படப்பிடிப்பை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஜனங்கள் பீதியடைந்து ஓடினர். இந்த திடீர் விபத்தால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இன்றுடன் ஸ்ரீரங்கம் படப்பிடிப்பு முடிவடைகிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil