வழக்கு எண் படத்தைப் பார்த்த ரஜினி படத்தை மனம் திறந்து பாராட்டினார். பாராட்டாமல் இருக்க முடியாத படம். அடுத்து கும்கி. நடிகர் திலகத்தின் பேரன் அறிமுகமானது. ரஜினியின் அபிப்ராயத்தை கேட்க நடிகர் திலகத்தின் குடும்பமே காத்திருந்தது. அவரும் படத்தையும், பேரனையும் மனமார வாழ்த்தினார்.
இப்போது கோலிசோடா. படத்தைப் பார்த்தவர் லிங்குசாமியை அழைத்து பாராட்டியுள்ளார். முக்கியமாக கோயம்பேடு போன்ற இடத்தில் எப்படிப்பா இவ்வளவு அருமையாக எடுத்தீங்க என்று ஆச்சரியப்பட்டுள்ளார். படத்தை இயக்கிய விஜய் மில்டனுக்கும், படத்தில் நடித்தவர்களுக்கும் தனது பாராட்டுக்களை கூறிக் கொண்டார்.
நடிகர் திலகத்தின் பேரன் மட்டுமில்லை, யார் நன்றாக நடித்திருந்தாலும் ரஜினியிடமிருந்து ஒரு பாராட்டு நிச்சயம்.