ஆரி நடித்திருக்கும் இப்படம் சரியான வியாபாரம் அமையாததால் திரைக்கு வருவதில் சிக்கல் நீடித்து வந்தது.
படத்தை திரையிட சரியான நபரை தேடி அலைந்ததின் ஒருபகுதியாக நெடுஞ்சாலை உதயநிதி ஸ்டாலினுக்கும் திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்தவர் அசந்துபோய் படத்தின் விநியோக உரிமையை வாங்கினார்.
அடுத்த மாதம் 28 ஆம் தேதி படத்தை வெளியிடுவது எனவும் முடிவு செய்துள்ளனர்.
சாலைகளில் வசிக்கும் எளிய மனிதர்களைப் பற்றிய கதையிது. படத்தின் போஸ்டர்கள் அசப்பில் பருத்திவீரனைப் போலிருப்பதால் படத்துக்கு ஒரு எதிர்பார்ப்பு நிலவுகிறது.