இளவரசி என்றால் அழகு கொப்பளிக்கிற வேடமாகதான் இருக்கும். ஸ்ரோயாவுக்கு கிடைக்க இருப்பதாக கூறப்படும் இன்னொரு படம் இதற்கு நேர் எதிர். பாலாவின் புதிய படம்.
கரகாட்டத்தை மையமாக வைத்து பாலா இயக்கப் போகிற படத்தில் சசிகுமார் நடிக்கிறார். படத்துக்கான பன்னிரெண்டு பாடல்களையும் ஆறே நாளில் அடித்து முடித்துவிட்டார் இசைஞானி. இந்தப் படத்தில் ஸ்ரேயா நடிக்கயிருப்பதாக பலமாக கிசுகிசுக்கிறார்கள். ஸ்ரேயாவின் நளினமான உடல்வாகு மற்றும் நடனத் திறமைக்காக அவரை பாலா தேர்வு செய்திருப்பதாக தகவல்.
அது உண்மையென்றால் பாலாவின் மதிப்பூட்டுக்கு நூற்றுக்கு நூறு தரலாம்.
வாஜிவாஜி சிவாஜியில் ஸ்ரேயா காட்டிய மேஜிக் இன்னும் கண்ணுக்குளே;ளேயே நிற்கிறது. மனம் துள்ளுகிற அதேநேரம் பாலாவைப் பார்த்து பம்மவும் செய்கிறது.
தனது படத்தில் தோல் வெளுத்த நடிகையை தேர்வு செய்து கறுப்பு பெயிண்ட் அடித்து திருஷ்டி கழிக்காமல் பாலாவுக்கு மனசு ஆறாது. கரகாட்டக்கார ஸ்ரேயாவுக்கும் அப்படியொரு கருமழை அபிஷேகம் இருக்காது என்பதற்கு உத்தரவாதமில்லை.
பொறுத்திருந்து பார்ப்போம், பாலா யாரை தேர்வு செய்கிறார் என்பதையும், அவர் பெயின்ட் அடிக்கிற அழகையும்.