சரி, படம் எப்படி?
விஜய் சேதுபதி என்ன கதை கேட்டு இதில் நடித்தார்? படம் பார்த்த சாதாரண ரசிகனின் கேள்வி இது. படத்தில் அவர் இரண்டாவது ஹீரோ போலதான்.
இனிகோ பிரபாகரனுக்குதான் அதிக முக்கியத்துவம். சோகக் கதையைப் பேசி என்னாகப் போகுது என்று ரம்மி பற்றியே விஜய் சேதுபதி வாய் திறக்கவில்லை. அவரைப் பொறுத்தவரை பண்ணையாரும் பத்மினியும்தான் 2014 ல் வெளியாகும் முதல் படம்.
ரம்மியை த ு hக்கி நிறுத்தும் கடைசி முயற்சியாக 15 நிமிடங்களை படத்திலிருந்து எடிட் செய்திருக்கிறார்கள். பாதி படத்தை எடிட் செய்தாலும் படம் பிக்கப்பாகாது என்பது சரித்திர உண்மை.
எத்தனை குளுக்கோஸ் ஏற்றினாலும் கோமாவிலிருந்து ரம்மி மீளப்போவதில்லை.