ஒரே நேரத்தில் இரு படங்கள் - ஜில்லா இயக்குனர்
, ஞாயிறு, 19 ஜனவரி 2014 (13:17 IST)
விஜய் படங்களை இயக்குகிற இளம் இயக்குனர்களுக்கு ஒரு ராசி உண்டு. விஜய் படம் முடிந்ததும் உடனடியாக காணாமல் போனவர்கள் லிஸ்டில் இடம் பிடித்துவிடுவார்கள். அவர்கள் மீண்டுவர சில வருடங்களாவது பிடிக்கும்.
அழகிய தமிழ்மகன் படத்தை இயக்கிய பரதன் காணாமல் போய் இப்போதுதான் அதிதி என்ற படத்தின் மூலம் திரும்பி வந்திருக்கிறார். சுறா எஸ்.பி.ராஜ;குமாரும் இப்போதுதான் அடுத்தப் படத்தை இயக்குகிறhர். வேட்டைக்காரன் பாபுசிவன் இன்னமும் தலைமறைவாக இருப்பதாக கேள்வி.இந்த தலைமறைவு சரித்திரத்தை ஜில்லா...
முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது. படம் சுமார் என்று விமர்சகர்கள் சொன்னாலும் கரன்சி கணிசமாக வசூலாவதால் விஜய்யும், சௌத்ரியும் ஹேப்பி. நடிகர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் அதுதானே முக்கியம். தமிழ், தெலுங்கில் இயக்குனர் நேசனுக்கு அழைப்புகள் குவிகிறது. அவரும் தமிழில் ஒன்று, தெலுங்கில் ஒன்று என ஒரே நேரத்தில் இரு படங்கள் செய்ய தயார்.
இரண்டு ஸ்கிரிப்ட்களும் நேசனிடம் தயாராக உள்ளன. யார் நடிப்பது என்பது மட்டும் இன்னும் முடிவாகவில்லை. ஜில்லா படத்தைப் பார்த்த ஜுனியர் என்.டி.ஆர். நேசனிடம் ஒரு படம் செய்துதர கேட்டிருப்பதால் நேசனின் தெலுங்கு ஸ்கிரிப்டில் அவர் நடிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.
இன்னும் சில தினங்களில் நேசனிடமிருந்து உற்சாக அறிவிப்புகள் அணிவகுக்கலாம்.