நடிகர் அஜித்குமார் தனது ரசிகர்களின் நலனில் அக்கரை கொண்டுதான் தனது ரசிகர் மன்றங்களையே களைத்தார். ரசிகன் ரசிகனாக மட்டுமே இருக்க வேண்டும். தனக்காக யாரும் செலவு செய்வதோ, ஆடம்பரம், ஆர்ப்பாட்டம் செய்வதையோ விரும்பமாட்டார்.
FILE
என் ரசிகர்கள் முதலில் அவரவர்கள் தனது குடும்பத்தை கவனிக்க வேண்டும். அப்புறம்தான் மற்றதெல்லாம் என்பதில் உறுதியோடு இருப்பார். ஆனால், அவரது வார்த்தையையும் மீறும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது.
நேற்று ஊத்துக்கோட்டை, நாகலாபுரம் சாலையில் உள்ள ஏவிஎம் தியேட்டரில் வெளியான வீரம் திரைப்படத்துக்கு ஏராளமான அஜித் ரசிகர்கள் வந்திருந்தனர். அதில் ஒரு கோஷ்டியை சேர்ந்தவர்கள் கிளைமாக்ஸில் வரும் ஜிங்கு சக்கான் பாடலுக்கு திரைமுன் எழுந்து ஆட, மற்றொரு தரப்பினர் தட்டிக்கேட்க, கைகலப்பு நடந்ததோடு ஸ்கிரீனை கிழித்து எறிந்ததால் படம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.