தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் சூர்யா நடிக்க, உருவாகிவரும் படம் ‘அஞ்சான்’ .
FILE
இயக்குனர் கவுதம்மேனனின் ‘துருவ நட்சத்திரம்’ படத்திலிருந்து விலகியதற்குப் பின் சூர்யா நடிக்கும் படம் இது. மும்பையில் தொடங்கி, முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடையும் வரை தலைப்புக்காக போராடி வந்த லிங்குசாமிக்கு இப்போதுதான் இந்த தலைப்பு கிடைத்திருக்கிறது.
அஞ்சான் என்றால் யாருக்கும், எதற்கு அஞ்சாதவன் என்று பொருள். அப்படி தைரியமான கேரக்டரில் நடிக்கிறார் சூர்யா. தோல் அலர்ஜி காரணமாக சிகிச்சை எடுத்து வந்த சமந்தா, பூரண குணமடைந்து தற்போது இந்த படத்தில் நடித்து வருகிறார்.
லிங்குசாமியின் ’திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனத்துடன் சேர்ந்து தயாரிக்கிறது யு டிவி. வரும் ஆகஸ்ட் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதால் வேகமாக படத்தை முடிக்க இருக்கிறார்கள்.