காதல் முற்றிய நிலையில் நயன்தாரா பிரபுதேவாவின் பெயரை பிரபு என்று பச்சைக்குத்திக் கொண்டது பாரதம் முழுக்க பிரபலம். குஷ்பு தனது மகள்களின் பெயரை பச்சைக்குத்திக் கொண்டிருக்கிறார். த்ரிஷா நிமோ மீனின் படத்தை. அர்ஜுன் தேசிய கொடியை பச்சைக்குத்திக் கொண்டுள்ளார்.
ப்ரியங்கா சோப்ரா தனது தந்தையின் நினைவாக டாடிஸ் கேர்ள் என்று பச்சை குத்திக் கொண்டார். அவர் வழியில் இப்போது ப்ரியாமணியும் தனது கையில் டாடிஸ் கேர்ள் என்று பச்சை குத்திக் கொண்டிருக்கிறார். பிரபலமான பிறகு நடிகைகள் பெற்றோரை மதிக்க மாட்டார்கள் என்ற பொதுவான அபிப்ராயத்தை இந்த நடிகைகள் பச்சையின் மூலம் பொய்யாக்கியிருக்கிறார்கள்.
இவர்களைப் போல் தனது தாயின் பெயரை ஒருவர் பச்சை குத்திக் கொண்டிருக்கிறார். அவர், ஹன்சிகா.
வாழ்க நடிகைகளின் பச்சை மோகம்.