கருணை கொலை படத்தில் அஸ்வின் சேகர்
, சனி, 11 ஜனவரி 2014 (15:26 IST)
அஸ்வின் சேகரை இந்நேரம் மறந்திருப்பீர்கள் என்று சொன்னால், அவரை தெரிந்தால்தானே மறப்பதற்கு என்று அடிக்க வருவீர்கள். அஸ்வின் சேகர் அரசியல் காமெடியர் எஸ்.வி.சேகரின் மகன். ஃபிலாசபி பேசும் எஸ்.வி.சேகர் மகனை வைத்து எடுத்த வேகம் படம் ஹாலிவுட் செல்லுலார் படத்தின் அப்பட்ட காப்பி. இதேகதையைதான் திமுக எம்பி ரித்தீஷும் நாயகன் என்ற பெயரில் எடுத்தார். எடுக்கத் தெரியாமல் எடுத்ததில், நடித்ததில் இரண்டுமே அட்டர் ப்ளாப்.இப்போது உங்கள் ஞாபகங்கள் கொஞ்சம் துலங்கியிருக்கும். கடைசியாக நினைவில் நின்றவள் என்ற படத்தில் அஸ்வின் நடித்தார். இது நடந்து வருடங்கள் ஆகிறது. படத்தில் நடித்த கீர்த்தி சாவ்லா எல்லாம் ரிட்டையர்ட் ஆகி மாமாங்கம் ஆகிறது. அஸ்வினும் வேறு பிசினஸில் பிஸியாகியிருப்பார் என்று பார்த்தால், அதே படத்துடன் மனிதர் ரீஎன்ட்ரி கொடுக்கும் பரபரப்பில் இருக்கிறார்.நினைவில் நின்றவள் படத்தை இயக்கிய அகஸ்திய பாரதி சில மாதங்கள் முன் புற்று நோயால் மரணமடைந்ததால் படமும் பெட்டிக்குள்ளிருந்து வெளியேறாது என்றே நினைத்தனர். ஆனால் படத்தை தயாரித்த சபரி மூவிஸ் போஸ்ட்புரொடக்சனை முடித்து படத்தை வெளியிடுகிறது. இதுவொரு த்ரில்லர். கருணை கொலையை மையப்படுத்தியது.இதையடுத்து நட்டிகுமாரின் புதிய படத்திலும், மணல் கயிறு இரண்டாம் பாகத்தில் நடிக்கயிருப்பதாக ஒரே நேரத்தில் இரு குண்டுகள் வீசியிருக்கிறார் அஸ்வின். வெங்கடேசா... தமிழனை காப்பாத்துப்பா.