Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நான் சொன்னதை திரித்து எழுதிட்டாங்க - நமீதா எரிச்சல்

நான் சொன்னதை திரித்து எழுதிட்டாங்க - நமீதா எரிச்சல்
, வெள்ளி, 10 ஜனவரி 2014 (12:59 IST)
கடந்த இரு தினங்களாக நமிதா குறித்த சர்ச்சை சுழற்றியடிக்கிறது. பத்திரிகையாளர்களுக்கு பேட்டி தந்த நமிதா, சரத்குமார் அரசியல் கட்சி நடத்துகிறாரா என்று கேட்டதாக பத்திரிகையில் செய்தி வெளியானதே இதற்கு காரணம்.
FILE

விரைவில் அரசியல் கட்சியில் (எந்த கட்சி என்பது தெரியவில்லை) சேரவிருக்கிற நமிதா, சரத்குமார் ஒரு கட்சியின் தலைவர் என்பதுகூட தெரியாமலா இருக்கிறார்? தெரியும், ஆனால் சரத்குமாரை வேண்டுமென்றே மட்டம் தட்ட இப்படியொரு கேள்வியை கேட்டிருக்கிறார் என நமிதாவை மையப்படுத்தி போட்டுத் தாக்குகிறார்கள்.

இவ்வளவு வருடங்களாக சினிமாவில் புழங்குகிற நமிதாவுக்கு இந்த சர்ச்சையை எப்படி கையாள வேண்டும் என்பது சொல்லியா தெரிய வேண்டும். சேலைக்கும் பாதகமில்லாமல் முள்ளுக்கும் சேதராமில்லாமல் அவர் தந்திருக்கும் விளக்கம் க்யூட்.

என்னிடம் ஆம் ஆத்மி கட்சி பற்றியும் மோடி பற்றியும் கேள்வி கேட்டனர். நான் பதில் தந்தேன். அப்போது ஒரு நிருபர் சரத்குமாருடன் கூட்டணி அமைப்பீர்களா என்று கேட்டார். அதுக்கென்ன எங்களுடையது வெற்றிக் கூட்டணியாச்சே என்று பதிலளித்தேன். அதற்கு அவர், நான் சினிமாவைச் சொல்லவில்லை, அவரது கட்சியுடனான கூட்டணி பற்றி கேட்டேன் என்றார். நான் சினிமா பற்றி கேட்டதாக நினைத்துவிட்டேன். அரசியல் பற்றி இப்போதைக்கு பதில் கூற முடியாது. ஒருமாதம் பொறுத்திருங்கள் என்றேன். அதைத்தான் சரத்குமார் கட்சி நடத்துகிறாரா என்று நான் சொன்னதாக திரித்து எழுதிவிட்டார்கள்.

நான் நடிகை, அவர் நடிகர் சங்க தலைவர். அவர் கட்சி நடத்துவது எனக்கு தெரியாமலா இருக்கும் என நீண்ட விளக்கம் தந்துள்ளார்.



Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil