மகேந்திரன் என்பவர் தனது டப்பிங் படத்துக்கு ஜில்லா என்று பெயர் வைத்திருப்பதாகவும், அதேபெயரில் 2008ல் சென்சார் சான்றிதழ் வாங்கியதாகவும், அதனால் தனது படத்தின் பெயரில் வெளியாகவிருக்கும் விஜய்யின் ஜில்லா படத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இது குறித்து விளக்கம் கேட்டு ஜில்லா தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும், இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெறுவதாக இருந்தது.
இந்த வழக்கு காரணமாக ஜில்லா நாளை வெளியாகுமா என்ற தடுமாற்றம் எல்லோரிடமும் காணப்பட்டது. மேலும், வழக்கு தொடுத்த மகேந்திரன், தன்னை விஜய் ரசிகர்கள் வழிமறித்து தாக்கியதாக நேற்றிரவு போலீஸில் இன்னொரு புகாரும் தந்திருந்தார்.
இப்படியொரு குழப்பமான சூழலில் மகேந்திரன் தான் தொடுத்த வழக்கை இன்று வாபஸ் பெற்றுக் கொண்டார். இந்த திடீர் திருப்பம் காரணமாக ஜில்லா திட்டமிட்டபடி நாளை வெளியாக உள்ளது.