உதய்கிரண் தற்கொலை - இளம் நடிகையை விசாரிக்க போலீஸ் முடிவு
, வியாழன், 9 ஜனவரி 2014 (11:02 IST)
நடிகர் உதய்கிரண் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியிலிருந்து திரையுலகம் இன்னும் மீளவில்லை. அவரின் தற்கொலைக்கான காரணத்தை அறிந்து கொள்வதில் போலீஸ் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது.
இந்நிலையில் நுவ்வு நேனு படத்தில் உதய்கிரணுடன் ஜோயாக நடித்த அனிதா உதய்கிரணின் தற்கொலை குறித்து பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அனிதா சாமுராய், வருஷமெல்லாம் வசந்தம், சுக்ரன் போன்ற தமிழ்ப் படங்களில் நடித்தவர். அவர் அளித்த பேட்டியில்,கடந்த ஒரு வருடமாக உதய்கிரணுடன் எனக்கு நட்பு இருந்தது. எப்போதாவது போனில் பேசுவேன். கடந்த 2012 அவர் திருமணம் செய்து கொண்டபின் பேசினேன். சொந்த வாழ்வில் அவர் சந்தோஷமாக இல்லை. அடுத்தடுத்து 3 ஹிட்கள் கொடுத்த உதய்கிரண் வாழ்வில் இன்னும் எவ்வளவோ சாதிக்க வேண்டி இருந்தது. அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சல்தான் அவரை தற்கொலை செய்ய தூண்டியிருக்கிறது என கூறியிருந்தார்.இந்த பேட்டியை தொடர்ந்து உதய்கிரணுக்கு யாரால் எதற்கு மன உளைச்சல் ஏற்பட்டது என்று அனிதாவிடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.